“அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். அவர் மக்களை புற்தரையில் உட்காரும்படிச் செய்தார். பின்பு அவர், அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் அதை மக்களுக்குக் கொடுத்தார்கள். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. இவர்களைத் தவிர, பெண்களும் பிள்ளைகளுங்கூட இருந்தார்கள்.
வாசிக்கவும் மத்தேயு 14
கேளுங்கள் மத்தேயு 14
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: மத்தேயு 14:18-21
7 நாட்களில்
'ஆண்டவருடைய கணக்கு' என்பது மனிதனின் விளக்கத்திற்கு குழப்பமாக இருந்தாலும் அது ஆண்டவருக்கு முற்றிலும் சரியான கணக்கு. வேதாகமத்தில் காணப்படும் 7 அசாதாரணமான கணித நிகழ்வுகளை விரிவாக அறிந்துகொள்ள 'ஆண்டவருடைய கணக்கு' என்னும் இந்த திட்டத்தில் என்னுடன் இணைந்து பயணிக்கவும்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்