பிலி 4:11-23

பிலி 4:11-23 IRVTAM

என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எந்த இடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாக இருக்கவும், பட்டினியாக இருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் கற்றுக்கொண்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு. ஆனாலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடு பங்குகொண்டது நலமாக இருக்கிறது. மேலும், பிலிப்பியரே, நற்செய்தி ஊழியத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, உங்களைத்தவிர வேறு எந்த சபையும் எனக்குப் பணம் கொடுத்து உதவிசெய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியும். நான் தெசலோனிக்கேயில் இருந்தபோதும், என் குறைவுகளில் உதவிசெய்ய நீங்கள் பலமுறை பணம் அனுப்பி உதவி செய்தீர்கள். உங்களுடைய உதவிகளை நான் தேடாமல், உங்களுடைய உதவிகளால் உங்களுக்கு வரும் பலன் பெருகுவதையே பார்க்க விரும்புகிறேன். எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன். என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்களுடைய குறைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவிற்குள் மகிமையிலே நிறைவாக்குவார். நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் எல்லோருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடு இருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரண்மனையில் உள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிலி 4:11-23

கொந்தளிப்பான  நேரத்திலும் கூட நமது மனதின் சமநிலையைக் காத்துக் கொள்ளுதல்  பிலி 4:11-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

கொந்தளிப்பான நேரத்திலும் கூட நமது மனதின் சமநிலையைக் காத்துக் கொள்ளுதல்

3 நாட்கள்

நாம் ஒரு கொந்தளிப்பான காலத்தில் இருப்பதாக உணரும் போது மனநிலையை அமைதி நிலையில் காத்துக்கொள்வது சவாலானது என்பது விளங்கக் கூடிய கருத்துதான், ஆயினும் நிச்சயமாக இந்த ஒரு அமைதி நிலையை அடைந்து விடலாம். நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; சங்கீதம் 46:10a. ஒரு குழப்பமான மனதுக்கான ஒரே தீர்வு நம் நம்பிக்கை விசுவாசம் இவைகளில் அடங்கி இருக்கிறது.நம் மனதின் எண்ணங்களை அல்லது குழப்ப நிலைகளை தேவன் மேலேயே வைத்து, இந்தப் பாரச்சுமைகளை தேவனிடம் ஒப்படைத்து, அவருடைய மாறாத அன்பிலும், நம்மை விட்டு மாறாத அவருடைய பிரசன்னத்திலிருந்து வரும் தெய்வீக ஆறுதலையும் அமைதியையும் கண்டறிவதாகும்.