Even so reckon ye also yourselves to be dead unto sin, but alive unto God in Christ Jesus.
வாசிக்கவும் Romans 6
கேளுங்கள் Romans 6
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: Romans 6:11
7 நாட்களில்
இந்த 7 நாள் வாசிப்புத் திட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் எவ்வாறெல்லாம் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்த விரும்புகிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும், ஆண்டவரின் வல்லமையின் வெவ்வேறு அம்சத்தைப் பற்றி சிந்தித்து, உங்கள் விசுவாசத்தை மேலும் வளர்த்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
10 நாட்களில்
கிறிஸ்துவில் சுதந்திரம்: ஒரு புதிய தொடக்கம் கிறிஸ்துவில் நமக்குள்ள சுதந்திரம் என்பது வெறும் கோட்பாடு மட்டுமல்ல, அது நம் வாழ்வை மாற்றும் உன்னத உண்மை. ரோமர் 6-ன் படி, இயேசுவின் பலியால் நாம் பாவத்திலிருந்தும் சட்ட திட்டங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, கிருபையினால் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளோம். "விடுதலையாக வாழ" என்னும் இந்தப் புத்தகம், இந்தச் சுதந்திரத்தை அன்றாட வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை விளக்குகிறது. இது உங்கள் உறவுகள் மற்றும் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, நீதியுடனும் அன்புடனும் வாழ உங்களை வழிநடத்தும். இயேசு வாக்களித்த முழுமையான வாழ்வை அனுபவிக்க உங்களை அழைக்கும் ஒரு எளிய வழிகாட்டி இது
12 நாட்களில்
கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டங்களை மிகவும் நேசிக்கும் நாம், கிறிஸ்துவின் உயிர்ப்பையும் அதே உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். பெத்லகேமில் தொடங்கிய அவரின் பயணம், கொல்கொதாவில் நிறைவுற்றதாகத் தோன்றுகிறது. உண்மையில் அது அத்துடன் நிறைவடையவில்லை! கடைசி இராப்போஜனம், இயேசுவின் மரணம், இடைப்பட்ட ஓய்வுநாள் மற்றும் மகிமையான உயிர்த்தெழுதல் ஆகிய சம்பவங்களின் முக்கியத்துவத்தை தியானிக்க உதவும் 12-நாள் உயிர்ப்பு ஞாயிறு திட்டம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.
வருகின்ற 10 நாள் திட்டத்தில், தேவன் இந்த உலகத்தை எவ்வளவு மகிமையாய்ப் படைத்தார் என்பதையும், பாவத்தின் பிரவேசத்தினால் மனுக்குலம் அடைந்த அந்தகார நிலையையும் நாம் ஆராய்ந்து பார்க்கலாம். நாம் பாவிகளாயிருக்கையில் தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால், தமது தயையுள்ள சித்தத்தின்படி நமக்காக ஒரு மீட்பின் திட்டத்தை நியமித்தார். அந்தத் திட்டத்தை அவர் இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றி, நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு, இன்றும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம்மைப் பரிசுத்தமாக்கித் தமது கிருபையினால் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்தத் தியானத்தின் ஊடாக, கிறிஸ்துவுக்குள் நமக்குக் கிடைத்துள்ள புதிய அடையாளத்தையும், அவர் நமக்குக் கொடுத்துள்ள உன்னதமான பணியையும், நித்திய நம்பிக்கையையும் விரிவாகத் தியானிக்கப்போகிறோம்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!