யோசேப்பு தனது அண்ணன்மாரைக் கண்டவுடன், அவர்களை அடையாளம் கண்டுகொண்டான். ஆனாலும் அவர்களை அறியாத ஒருவனைப் போன்று நடந்துகொண்டு, அவன் அவர்களுடன் கடுமையாய்ப் பேசி, “நீங்கள் எங்கேயிருந்து வருகின்றீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு அவர்கள், “நாங்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக கானான் நாட்டிலிருந்து வந்திருக்கின்றோம்” என்றார்கள்.