நான் இங்கு வரும் ஒரு பெண்ணிடம், ‘உன் குடத்தைச் சரித்து நான் குடிக்கும்படி தண்ணீர் ஊற்று’ என்று சொல்வேன். அப்போது, ‘தாராளமாக அருந்துங்கள், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் ஊற்றுவேன்’ என்று சொல்கிறவள் யாரோ, அவளே உமது அடியவனாகிய ஈசாக்குக்கு நீர் தெரிவுசெய்த பெண்ணாயிருக்கட்டும். இதனால் என் எஜமான் ஆபிரகாமுக்கு நிலையான அன்பைக் காண்பித்தீர் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்று தனக்குள் மன்றாடினான்.