அப்போது கர்த்தர் அவனிடம், “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? அவனை வாய் பேச இயலாதவனாகவும் செவிப்புலனற்றவனையும் ஆக்குகின்றவர் யார்? அவனுக்கு பார்வையைக் கொடுப்பதோ, பார்வையற்றவனாக்குவதோ யார்? கர்த்தராகிய நான் அல்லவா? ஆதலால் நீ இப்போது போ; பேசுவதற்கு நான் உனக்கு உதவி செய்து, நீ சொல்ல வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்” என்றார்.