இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரோமர் 8:1

ஆபாச வாழ்விலிருந்து விடுதலையை நோக்கி - ஜான் பெவரேயுடன்
5 நாட்கள்
இந்த தியானம் உங்களை குற்றப்படுத்துகிற ஒன்றோ ஆக்கினைக்குள்ளாக்கி பேசுகிற ஒன்றோ அல்ல. உங்கள் சுயமுயற்சியை சார்ந்து வெளிவர முயற்சித்து நீங்கள் தோற்றிருக்கலாம். நீங்கள் இருக்கும் நிலைமைக்கே உங்களிடம் வந்து, அன்பாய் உங்கள் கரங்களை பிடித்து, கிருபையும் சாத்தியமுமாம் இயேசுவினிடத்தில் உங்களை அழைத்து வந்து விடுதலையை அனுபவிக்க செய்வதே இந்த தியானத்தின் நோக்கம்.

ஜெபம் மெய்யாகும் போது
5 நாட்கள்
ஜெபம் சில நேரங்களில் தனிமையாகத் தோன்றலாம். பெரும்பாலும், ஜெப நேரத்தில் நான் என் இதயத்தையும் ஆத்துமாவையும் அமைதிப்படுத்த முயற்சிக்கிறேன், என் மனம் எல்லா இடங்களுக்கும் ஓடுகிறது. சில நேரங்களில் நான் தூங்கிவிடுவேன். சில சமயங்களில் என் பிரார்த்தனைகள் உச்சவரம்பிலிருந்து குதிப்பது போல் உணர்கிறேன். அப்படியிருப்பினும், இந்த நேரங்களில் தான் தேவன் நற்செய்தியை வழங்குகிறார் என்பதை நாம் அடிக்கடி உணராமல் போகிறோம் ஜெபத்தைப் பற்றிய நற்செய்தியைக். அறிந்து கொள்ளும்படி சிறிது நேரம் செலவிடுவோம்.

மரணத்தின் மீது வெற்றி
7 நாட்கள்
"இது வாழ்க்கையின் மற்றொரு பகுதி" என்று நாம் எப்போதும் கூறப்படுகிறோம், ஆனால் சாதாரணமான வார்த்தைகள் நேசிப்பவரை இழக்கும் வேதனையை குறைக்காது. வாழ்க்கையின் கடினமான சவால்களில் ஒன்றை எதிர்கொள்ளும்போது தேவனிடம் ஓட கற்றுக்கொள்ளுங்கள்.

உணர்ச்சி முழுமைக்கான ஏழு குறிப்புகள்
7 நாட்கள்
நீங்கள் உங்கள் உணர்ச்சி வாழ்க்கையில் கடவுளின் சிறந்ததை அடைவதில் ஏழு முக்கிய அம்சங்கள் உள்ளன. இவைகளை வரிசையாக செய்ய வேண்டியதில்லை. டாக்டர் சார்லஸ் ஸ்டான்லி உங்கள் ஆவி மற்றும் உணர்ச்சிகளில் முழுமையை அடைய உதவும் முக்கிய பழக்கங்களை உருவாக்க உதவுகிறார். இதுபோன்ற மேலும் பல வாசிப்பு திட்டங்களை intouch.org/plans இல் காணலாம்.

பளு அதிகம் இல்லாத பயணம் செய்
7 நாட்கள்
மும்முரமான கிறிஸ்துமஸ் காலத்தில், நம்மில் அநேகர் குடும்ப உறவுகள், பண பிரச்சனைகள், அவசர முடிவுகள் மற்றும் ஏமாற்றமளிக்கும் எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை உணருகிறோம். ஆகவே தொடர்ந்து வாசியுங்கள். பொறுமையாக ஒரு மூச்சு விடுங்கள். இந்த 'Life Church' இன் வேதாகம திட்டத்தை வாசித்து தேவன் நாம் சுமக்க சொல்லாத அநேக பாரங்களை நாம் சுமந்து கொண்டிருப்பதை உணருங்கள். இந்த பாரங்களை இறக்கி வைத்துவிட்டால் என்ன? பளு அதிகம் இல்லாத பயணம் செயலாம்.

இயேசு: நம் ஜெயக்கொடி
7 நாட்கள்
நாம் உயிர்த்தெழுதலின் பண்டிகையை கொண்டாடும்போது, நாம் வரலாற்றின் மிகவும் மேன்மையான வெற்றியையே கொண்டாடுகிறோம். இயேசுவானவரின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக, அவர் பாவம் மற்றும் பாதாளத்தையும், மற்றும் அவற்றின் எல்லா பின்விளைவுகளையும் நித்தியமாக தோற்கடித்தார், மேலும் அந்த ஜெயத்தை நம்முடன் பகிரவும் முடிவுசெய்தார். இந்த ஈஸ்டர் வாரத்தில், அவர் வெற்றி சிறந்து கைப்பற்றிய அரண்களைப் பற்றி சிந்திப்பதில் மூழ்குவோம், அவர் நமக்காக செய்த யுத்தத்தை நினைவுகூறுவோம், மற்றும் அவரை நமது ஜெயக் கொடியாக ஸ்தோத்தரிப்போம்.

குற்றவுணர்வை மேற்கொள்ளுதல்
7 நாட்களில்
நீங்கள் எப்போதாவது உங்களை நீங்களே குற்றப்படுத்தியிருக்கிறீர்களா? உங்களது தவறுகளின் மீது தொடர்ந்து கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறீர்களா? தொடர்ந்து நம் மீது குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பதுதான் பிசாசின் நோக்கம். அவன் சகோதரர்கள் மீது குற்றம் சாட்டுபவன் என்று அழைக்கப்படுகிறான். அவன் இரவும் பகலும் நம் மீது குற்றம் சாட்டுபவனாய் இருக்கிறான். சத்துருவின் இந்தத் திட்டம், நம்மைக் குறித்த ஆண்டவரது திட்டம் அல்ல! நீங்கள் உங்களையே மன்னிக்க வேண்டுமானால், எங்கு மனிக்கத் தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்த வாசிப்புத்திட்டத்தை வாசிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் எல்லாக் குற்றங்களுக்கும் நீங்கலாகி, சகல பரிமாணங்களிலும் மன்னிப்பை அனுபவிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். இன்றே அவருடைய சமாதானத்தைப் பெற்றுச் செல்லுங்கள்!