சங் 63

63
சங்கீதம் 63
யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய பாடல்.
1தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்;
வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது,
என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது.
2இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து,
உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
3உயிரைவிட உமது கிருபை நல்லது;
என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும்.
4என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து,
உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன்.
5நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்;
என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
6என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது,
இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
7நீர் எனக்குத் துணையாக இருந்ததினால்,
உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.
8என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது;
உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
9என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ,
பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.
10அவர்கள் வாளால் விழுவார்கள்;
நரிகளுக்கு இரையாவார்கள்.
11ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்;
தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள்
அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்;
பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.

اکنون انتخاب شده:

சங் 63: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید