சங் 21

21
சங்கீதம் 21
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
1யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்;
உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்!
2அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி,
அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா)
3உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து,
அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர்.
4அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்;
நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர்.
5உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது;
மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர்.
6அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்;
அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
7ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்;
உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார்.
8உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்;
உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
9உமது கோபத்தின் காலத்திலே
அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்;
யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்;
நெருப்பு அவர்களை அழிக்கும்.
10அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும்
அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர்.
11அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்;
தீவினை செய்ய முயன்றார்கள்;
ஒன்றும் வாய்க்காமல்போனது.
12உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர்.
13யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்;
அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.

اکنون انتخاب شده:

சங் 21: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید