சங் 14

14
சங்கீதம் 14
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
1தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்;
நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,
யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார்.
3எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;
நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
4அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ?
அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே;
அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.
5அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்;
தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.
6ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால்,
நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.
7சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;
யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,
யாக்கோபுக்குச் சந்தோஷமும்,
இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

اکنون انتخاب شده:

சங் 14: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید