சங் 123

123
சங்கீதம் 123
ஆரோகண பாடல்.
1பரலோகத்தில் இருக்கிறவரே,
உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன்.
2தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,
வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,
எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும்,
எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
3எங்களுக்கு இரங்கும் யெகோவாவே,
எங்களுக்கு இரங்கும்;
அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
4சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும்,
அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும்,
எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.

اکنون انتخاب شده:

சங் 123: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید