சங் 110

110
சங்கீதம் 110
தாவீதின் பாடல்.
1யெகோவா என் ஆண்டவரை நோக்கி:
நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும்,
நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார்.
2யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்;
நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும்.
3உமது மகத்துவத்தின் நாளிலே
உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்;
அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள்.
4நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி
என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்;
மனம் மாறாமலுமிருப்பார்.
5உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர்,
தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.
6அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்;
எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்;
அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.
7வழியிலே அவர் நதியில் குடிப்பார்;
ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.

اکنون انتخاب شده:

சங் 110: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید