Logo YouVersion
Eicon Chwilio

மன்னிப்புSampl

மன்னிப்பு

DYDD 4 O 7

நம்பிக்கை உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?

இன்று, உறவு முறிந்தால் நீ என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி பேசுவோம். வாதங்கள் அனைவருக்கும் ஏற்படுகின்றன, ஆனால் இரு தரப்பினரின் உடன்படிக்கையுடன், மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவது சாத்தியமாகும். இது நடக்க, சேதமடைந்த அல்லது முற்றிலும் அழிக்கப்பட்ட நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது முற்றிலும் அவசியம். அங்கு செல்வதற்கு, செய்த தவறுகளை அடையாளம் கண்டு, சம்மந்தப்பட்ட நபரை வெற்றிகரமாக மன்னிப்பது முக்கியம்.

பார்த்தோமானால், நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டுவதற்கு மன்னிப்பு மிகவும் அவசியம். இது இல்லாமல், உடைந்த உறவை மீட்டெடுக்க முடியாது. நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது இங்கே…

உன் பிரச்சனையை ஆண்டவரிடம் முன்வை. உன் காயத்தை அவரிடம் சொல் அல்லது எழுது. முற்றிலும் வெளிப்படையாக இரு. மன்னிக்க உதவுமாறு அவரிடம் கேள்.

பின்னர், அவருடைய முன்னிலையில், மன்னிப்பதைத் தேர்ந்தெடு, ஏனென்றால் இயேசு நமக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுத்தது, "எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்." (வேதாகமம், மத்தேயு 6:12)

இறுதியாக, நீ மன்னித்துவிட்டாய் என்று கர்த்தருக்கு முன்பாக அறிக்கை செய். உன் பிரச்சனையை நீ ஒரு காகிதத்தில் எழுதியிருந்தால், அதை கிழித்துப்போடு அல்லது எரித்துவிடு (நிச்சயமாக வீட்டிற்கு தீ வைக்காமல்!).

நீ மன்னிக்கும்போது, அந்த தருணத்திலிருந்து, நீ அவமதிப்பிலிருந்து விடுபடுவாய், மேலும் வலி குறையத் தொடங்கும், பின்னர் முற்றிலும் மறைந்துவிடும்.

சில சமயங்களில், “அவன்/அவள் என்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை நான் காத்திருக்கப் போகிறேன், பிறகு நான் மன்னிப்பேன்!” என்று சொல்ல ஆசைப்படலாம். விருப்பத்திற்கு மாறாக, இந்த சூழ்நிலைகளில், அந்த நபர் ஒருபோதும் வரவில்லை என்றால், நாம் கைதிகளாக இருந்துவிடுகிறோம், நாம் பாதிக்கப்படுகிறோம்.

மன்னிப்புத் தரும் சுதந்திரத்தை உனக்கு நீயே மறுக்காதே. நீ சுதந்திரமாக இருக்க பிறந்தாய், ஆண்டவர் உனக்காக மட்டுமே சேமித்து வைத்திருக்கும் வாழ்க்கையை அனுபவிக்கவே பிறந்தாய். மன்னிப்பின்மை உன் ஜீவனை, உன் மகிழ்ச்சியை உன்னிடமிருந்து திருட இனியும் அனுமதிக்காதே... மன்னி! உண்மையான மன்னிப்பை அளிக்க ஆண்டவர் உனக்கு உதவுவார். நீ அவரிடம் கேட்டால் அவர் அதைச் செய்வார் என்பதை அறிந்து கொள்!

Ysgrythur

Am y Cynllun hwn

மன்னிப்பு

சில சமயங்களில் மன்னிப்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. மனுஷீகத்தில் மன்னிப்பது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆண்டவரின் உதவியோடு அது கூடும். மன்னிப்பின்மை நம் வாழ்வில் பல ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருப்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் வேதாகமத்தின் மூலம் மன்னிப்பைப் பற்றி ஆராய்வோம், கற்றுக்கொள்வோம்.

More