YouVersion Logo
Search Icon

பிரசங்கி 1

1
அனைத்தும் வெறுமை
1தாவீதின் மகனும், எருசலேமில் அரசனாய் இருக்கின்றவனுமாகிய பிரசங்கியின் வார்த்தைகள் இவை:
2“வெறுமையிலும் வெறுமை!
அனைத்துமே வெறுமை!
வெறுமையிலும் வெறுமை!” என்று
கூறுகின்றார் பிரசங்கி.
3சூரியனுக்குக் கீழே மனிதன் பாடுபட்டு ஆற்றுகின்ற அனைத்து கடின உழைப்பாலும்
அவன் பெற்றுக்கொள்ளும் பலன்தான் என்ன?
4ஒரு சந்ததி மறைகின்றது, இன்னுமோர் சந்ததி தோன்றுகின்றது;
ஆனாலும் பூமி மட்டும் என்றும் நிலைத்திருக்கின்றது.
5தினமும் சூரியன் உதிக்கின்றது, சூரியன் மறைகின்றது;
தான் உதிக்கும் இடத்துக்கே அது மீண்டும் விரைகின்றது.
6காற்று தெற்கு நோக்கி வீசுகின்றது,
வடக்கு நோக்கியும் திரும்புகின்றது;
அது சுழன்று சுழன்று அடித்து,
எப்போதும் தான் சுற்றிவந்த இடத்துக்கே திரும்பிச் செல்கின்றது.
7ஆறுகள் அனைத்தும் கடலில் கலந்தும்,
கடல் ஒருபோதும் நிரம்புவதில்லை.
ஆறுகள் ஆரம்பித்த இடத்துக்கே திரும்பி,
மீண்டும் பாய்கின்றன!
8இவை அனைத்திலும்
விபரிக்க முடியாதளவு வெறுப்பே முடிவு,
பார்த்து பார்த்து கண்களுக்கு முடிவில்லை;
கேட்டு கேட்டு காதுகளுக்கும் நிறைவில்லை.
9இருந்ததே இனிமேலும் இருக்கும்;
செய்யப்பட்டதே இனிமேலும் செய்யப்படும்;
சூரியனுக்குக் கீழே புதிதாக ஒன்றுமேயில்லை.
10“பாருங்கள், இது புதியது!” என்று
யாராவது சொல்லக்கூடிய ஏதாவது ஒன்று உண்டா?
இல்லை, அது காலம் காலமாக, முன்னரே இங்கு இருந்தது;
நமக்கு வெகுகாலத்துக்கு முன்னரே அது இங்கு இருந்தது.
11முன்பு நிகழ்ந்தவை எவருக்கும் நினைவில் இல்லை;
அதுபோல இனி வருகின்றவர்களுக்கும் இனிமேல் நிகழப் போகின்றவை
நினைவில் இருக்கப் போவதில்லை.
ஞானம் அர்த்தமற்றது
12பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன். 13இவ்வுலகத்தில்#1:13 இவ்வுலகத்தில் வானத்தின் கீழ் நடைபெறும் எல்லாவற்றையும் ஞானத்தால் ஆராய்ந்து கண்டுபிடிக்கும்படி என் மனதை அர்ப்பணித்தேன். அதனால் இறைவன் மனுக்குலத்துக்கு கொடுத்திருக்கும் கடமையானது ஒரு மிகப்பெரிய சுமை என்றுணர்ந்தேன். 14சூரியனுக்குக் கீழே செய்யப்படும் அனைத்து செயல்களையும் நான் பார்த்திருக்கின்றேன்; இவை அனைத்தும் வெறுமையும், காற்றைக் கையினால் பிடிக்கும் ஒரு முயற்சியுமாய் இருக்கின்றன.
15வளைந்ததை நேராக்க முடியாது;
இல்லாதவற்றை கணக்கிடவும் முடியாது.
16“பாருங்கள், எனக்கு முன்னர் எருசலேமில் ஆட்சி செய்த எல்லோரையும்விட, நான் ஞானத்தில் வளர்ந்து பெருகியிருக்கின்றேன்; மிகுந்த ஞானத்தையும் அறிவையும் என் மனதில் அனுபவபூர்வமாகக் கண்டிருக்கின்றேன்” என எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். 17பின்பு ஞானத்தை விளங்கிக்கொள்வதற்கும், மடமையையும் அறிவீனத்தையும் விளங்கிக்கொள்வதற்கும், நான் என் மனதை ஈடுபடுத்தினேன். ஆனால் இதுவும் காற்றைக் கையினால் பிடிக்கும் ஒரு முயற்சியே என்று கண்டுகொண்டேன்.
18ஏனெனில் அதிக ஞானத்தினால் அதிக துக்கம் வருகின்றது;
அறிவை பெருக்கிக் கொண்டவன் மனவேதனையையும் பெருக்கிக் கொள்கின்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in