YouVersion Logo
Search Icon

சங் 87

87
சங்கீதம் 87
கோராகின் மகன்களுடைய பாடல்.
1அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.
2யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட
சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார்.
3தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)
4என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்;
இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும்,
எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
5சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்;
உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார்.
6யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது,
இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா)
7எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று
பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள்.

Currently Selected:

சங் 87: IRVTam

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங் 87