அந்த நேரத்திலேயே, நோயுற்றிருந்தவர்கள், வாதைகளால் அவதிப்பட்டவர்கள், தீய ஆவியால் பீடிக்கப்பட்டிருந்தவர்களான பலரை இயேசு குணமாக்கி, கண் பார்வையற்ற பலருக்கு பார்வை கொடுத்தார். எனவே அவர் அந்த தூதுவர்களிடம், “நீங்கள் திரும்பிப் போய், காண்பவற்றையும் கேட்பவற்றையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கின்றார்கள், தொழுநோயாளர் குணமடைகிறார்கள், செவிப்புலனற்றோர் கேட்கின்றார்கள், இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.