1
ஆதியாகமம் 22:14
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
ஆபிரகாம் அந்த இடத்துக்கு, “யேகோவாயீரே” எனப் பெயரிட்டார். அதனால், “கர்த்தரின் மலையில் கொடுக்கப்படும்” என இன்றுவரை சொல்லப்படுகிறது.
ஒப்பீடு
ஆதியாகமம் 22:14 ஆராயுங்கள்
2
ஆதியாகமம் 22:2
இறைவன் அவரிடம், “உன் மகனும், நீ நேசிக்கும் உன் ஒரே மகனுமான ஈசாக்கை, மோரியா பிரதேசத்துக்கு அழைத்துக்கொண்டு போ. அங்கே நான் உனக்கு சுட்டிக் காட்டுகின்ற மலை ஒன்றின்மீது அவனைத் தகனபலியிடு” என்றார்.
ஆதியாகமம் 22:2 ஆராயுங்கள்
3
ஆதியாகமம் 22:12
அவர், “சிறுவன்மேல் கைவைக்காதே, அவனை ஒன்றும் செய்யாதே; நீ உன் மகனை, ஒரே மகன் என்றும் பாராமல் எனக்குப் பலியிட உடன்பட்டபடியால், நீ இறைவனுக்குப் பயந்து நடக்கின்றவன் என்பதை நான் இப்போது அறிந்துகொண்டேன்” என்றார்.
ஆதியாகமம் 22:12 ஆராயுங்கள்
4
ஆதியாகமம் 22:8
அதற்கு ஆபிரகாம், “என் மகனே, தகனபலிக்கான செம்மறியாட்டுக்குட்டி, அதை இறைவன் பார்த்துக் கொள்வார்” என்றார். அவர்கள் இருவரும் தொடர்ந்து சென்றார்கள்.
ஆதியாகமம் 22:8 ஆராயுங்கள்
5
ஆதியாகமம் 22:17-18
‘நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் எண்ணற்ற நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகச் செய்வேன். உன் சந்ததியினர் அவர்களுடைய பகைவரின் பட்டணங்களைக் கைப்பற்றுவார்கள். நீ எனக்குக் கீழ்ப்படிந்தபடியால், உன் சந்ததியினர் ஊடாக பூமியின் அனைத்து இனங்களும் ஆசீர்வதிக்கப்படும்’ ” என்று சொன்னார்.
ஆதியாகமம் 22:17-18 ஆராயுங்கள்
6
ஆதியாகமம் 22:1
இவை நடைபெற்ற சிறிது காலத்தின் பின் ஆபிரகாமை இறைவன் பரிசோதித்தார். அவர், “ஆபிரகாமே!” என்று அவரை அழைத்தார். அதற்கு அவர், “இதோ இருக்கின்றேன்” என்றார்.
ஆதியாகமம் 22:1 ஆராயுங்கள்
7
ஆதியாகமம் 22:11
அப்போது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, “ஆபிரகாம்! ஆபிரகாம்!” என்று அவரை அழைத்தார். உடனே அவர், “இதோ இருக்கின்றேன்” என்று பதிலளித்தார்.
ஆதியாகமம் 22:11 ஆராயுங்கள்
8
ஆதியாகமம் 22:15-16
கர்த்தருடைய தூதனானவர் இரண்டாம் முறையும் வானத்திலிருந்து ஆபிரகாமை அழைத்து, “நீ இப்படிச் செய்ததால், உன் ஒரேயொரு மகனாக இருந்தும் மறுத்துவிடாமல் உன் மகனைக் கொடுத்ததால், கர்த்தர் தமது பெயரைக்கொண்டு ஆணையிட்டு அறிவிக்கின்றதாவது
ஆதியாகமம் 22:15-16 ஆராயுங்கள்
9
ஆதியாகமம் 22:9
அவர்கள் இறைவன் குறித்த இடத்துக்கு வந்தபொழுது, ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் விறகுகளை அடுக்கினார். அவர் தன் மகன் ஈசாக்கைக் கட்டி, அவனைப் பலிபீடத்தில் உள்ள விறகின்மேல் கிடத்தினார்.
ஆதியாகமம் 22:9 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்