இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரோமர் 5:4

கடினமான காலங்களில் கடந்து செல்லுதல்
4 நாட்கள்
நம் வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த குறுகிய 4-நாள் திட்டத்தில், நாம் தனியாக இல்லை என்பதையும், நம் வலிக்கு தேவன் ஒரு நோக்கம் வைத்து இருப்பதையும், அதை அவர் தனது பெரிய நோக்கத்திற்காக பயன்படுத்துவார் என்பதையும் அறிந்து உற்சாகமடைவோம்.

பெருந்தோற்று காலங்களில் நம்பிக்கை
5 நாட்கள்
சமீபகாலமாக இதுவரை உலகம் பார்த்திராத ஒரு சூழ்நிலையில் இன்று நாம் கடந்து போய்கொண்டிருக்கிறோம். சர்வத்தையும் படைத்து ஆளுகிற ராஜாதி ராஜாவை அண்டிகொண்டால் பிழைத்துகொள்வோம் என்பதை சரித்திரமும் ஒத்துகொள்ளும். இப்படிப்பட்ட காரியங்கள் ஏன் சம்பவிக்கிறது, இந்த சூழ்நிலையில் தேவன் நமக்கு தரும் தீர்வு என்ன, மரணமானாலும் ஜீவனானாலும் அவைகளை குறித்த நமது நம்பிக்கை என்ன என்பதை குறித்து வேதம் நமக்கு என்ன கற்றுகொடுக்கிறது ஆகிய காரியங்களை குறித்து இந்த தியானத்திட்டதின் கீழ் நாம் படிக்க இருக்கிறோம்.

மனப்பான்மை
7 நாட்கள்
ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியான மனப்பான்மையை கொண்டிருப்பது உண்மையாகவே ஒரு சவால் தான். இந்த ஏழு நாள் வாசிப்பு திட்டம் உங்களுக்கு ஒரு வேதாகம கண்ணோட்டத்தை கொடுப்பதோடு ஒவ்வொரு நாளும் வாசிக்க ஒரு குறுகிய பகுதியையும் கொண்டுள்ளது. வேதப்பகுதியை வாசித்து, உங்களையே நேர்மையாக ஆராய சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சூழ்நிலைக்குள் தேவனை பேச அனுமதியுங்கள்.

விட்டுவிடாதீர்கள்
7 நாட்கள்
நீங்கள் எப்போதாவது மிகவும் சோர்வாக அல்லது தோல்வியடைந்தது போல் உணர்ந்திருக்கிறீர்களா? விடாமுயற்சியுடன் இருப்பதற்கும் தொடர்ந்து முன்னேறுவதற்கும் வேதாகமம் ஊக்கமளிக்கிறது! இந்த 7 நாள் வாசிப்புத் திட்டம் முன்னோக்கிய பயணத்திற்கு உங்களைப் புதுப்பிக்கும்.

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்
7 நாட்கள்
வனாந்தர அனுபவமானது நம்மைத் தொலைந்து போனவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, உதவியற்றவர்களாக உணரச்செய்யும் ஒரு காலமாகும். ஆனாலும் வனாந்தர அனுபவத்தில் இருக்கும் சுவாரசியமான தன்மை என்ன என்றால், இது நம் கண்ணோட்டத்தை மாற்றக்கூடியது. வாழ்வை மாற்றமடையச் செய்வது. விசுவாசத்தை உருவாக்கும் தன்மையுடையது. இந்த வாசிப்புத்திட்டத்தை நீங்கள் படிக்கும்போது வனாந்தரத்தை வெறுக்காமல் அதைத் தழுவிக் கொண்டு கர்த்தர் உங்களில் தனது சிறப்பானதைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதுவே எனது ஜெபமாகும்.

பயணத்திற்கான மகிழ்ச்சி: சோதனையின் நடுவில் நம்பிக்கையைக் கண்டறிதல்
7 நாட்கள்
நாம் அதை எப்போதும் பார்க்கவோ உணரவோ முடியாது, ஆனால் தேவன் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்... நாம் கடினமான விஷயங்களைச் சந்திக்கும் போதும். இந்தத் திட்டத்தில், ஃபைண்டிங் ஹோப் ஒருங்கிணைப்பாளர் ஆமி லாரூ தனது சொந்த குடும்பத்தின் அடிமைத்தனத்துடன் போராடுவதைப் பற்றியும், தேவனின் மகிழ்ச்சி அவர்களின் இருண்ட காலங்களில் எவ்வாறு உடைந்தது என்பதைப் பற்றியும் இதயத்திலிருந்து எழுதுகிறார்.

உறவுகளை மீட்டெடுத்தலும் ஒப்புரவாகுதலும்
7 நாட்களில்
சண்டை சச்சரவுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன; அதற்காக, கசப்பான மற்றும் முறிந்த உறவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அதன் அர்த்தமல்ல. ஆனாலும் மற்றவர்களுடனான நமது உறவை நாம் சரிசெய்து குணப்படுத்துவதற்கு முன்பு, ஆண்டவருடனான நமது உறவை அவர் குணப்படுத்த நாம் இடங்கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தில், ஒப்புரவு என்ற அற்புதத்தை இயேசு எவ்வாறு செய்கிறார் என்பதைப் பார்க்க உங்களை அழைக்கிறோம். மனந்திரும்புதல், பரிகாரம் மற்றும் மன்னிப்பு ஆகிய அடிப்படைக் காரியங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் சண்டை சச்சரவை சமாளிப்பதைத் தாண்டி விடுதலை மற்றும் குணமடைதலுக்குக் கடந்து செல்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இந்தத் திட்டத்தின் மூலம் உறவில் உள்ள சிக்கல்களை எவ்வாறு கண்டறிவது என்பதைப் புரிந்துகொண்டு, நல்ல தீர்வுகளைக் கண்டறிந்து, மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகிய செயல்முறைகளின் வாயிலாக உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுவீர்கள்.

ஆண்டவரிடம் கொடுத்துவிடு – ஜெபிப்பதற்கான 7 நல்ல காரணங்கள்
7 நாட்களில்
ஜெபம் அவசியம்—அது நம் எல்லோருக்கும் தெரியும்—ஆனால், 'ஏன்?' என்று கேட்க ஒரு கணம் நிறுத்துவது நமக்கு பயனுள்ளதாக அமையும். இந்த வாசிப்புத் திட்டத்தில், ஒரு வலுவான ஜெப வாழ்க்கையை ஏன் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தும், ஏழு காரணங்களை நாம் ஆராய்வோம். இந்தப் பயணத்தில், நீங்கள் ஒருபோதும் எதிர்பாராத சில ஆச்சரியமான நன்மைகளை கண்டறியக் கூடும்.

வேதாகம ஞானத்துடன் தலைமையை அளவிடுதல்
8 நாட்கள்
நமது தலைமையை உயர்த்துவது இன்று முக்கியமானது. நமது மாறிவரும் சூழலை வழிநடத்தும் நமது தலைமைத் திறனை நாம் விரிவுபடுத்த வேண்டும், பெரிதாக்க வேண்டும், அதிகரிக்க வேண்டும், வளர்க்க வேண்டும். வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம், ஊழியர் / குழு இயக்கவியலை மாற்றுதல் மற்றும் மாறிவரும் பொருளாதாரம் ஆகியவை நாம் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள். ஆனால் நமது தலைமையை அளவிடுவது பணியிடத்திற்கானது என்று நினைக்கவேண்டாம். வீட்டிலும் நமது உறவுகளிலும் நமது தலைமையை நாம் அளவிட வேண்டும். நடைமுறை, தொடர்புடைய தலைமை நுண்ணறிவு பெற இன்று ஆராய்வோம்.

வாழ்க்கையின் புயல்களில் தேவனின் சத்தியத்தை கண்டுபிடித்தல்
10 நாட்கள்
கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகின் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க படுவதில்லை. உண்மையில், பிரச்சனைகள் வரும் என்று யோவான் 16:33 உறுதியளிக்கிறது. நீங்கள் இப்போது வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இந்த தியானம் உங்களுக்கானது. வாழ்க்கையின் புயல்களினுடாய் நமக்கு கிடைக்கும் நம்பிக்கையின் நினைவூட்டல் இது. இப்பொழுது நீங்கள் எந்தப் போராட்டத்தையும் எதிர்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் வரும் சோதனைகளில் உங்களுக்கு உதவும் அடித்தளத்தை அது உங்களுக்கு வழங்கும்.

விசுவாசம் தளரும் போது: சந்தேகத்தின் நிழலில் தேவனைக் கண்டடைய 10 நாட்கள்
10 நாட்கள்
ஒருவர் விசுவாசத்தோடும் சந்தேகத்தோடும் போராடும்போது தனிமையாகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் உணரக்கூடும். சிலர் மெளனமாக கஷ்டங்களை சகிக்கின்றனர், ஆனால் மற்றவர்களோ சந்தேகம் விசுவாசத்தோடு பொருந்தாது என்று நினைத்து விசுவாசத்தையே கைவிட்டுவிடுகின்றனர். டோமினிக் டன் என்பவர் இது மிகவும் கவலைக்குரியது என்றும் மிக தவறானது என்றும் நம்புகிறார். கேள்வி கேட்பது இயல்பானது மாத்திரம் அல்ல, ஒரு வளமான மற்றும் திடமான விசுவாசத்திற்கு வழிவகுக்கக் கூடியது என்றும் வேதாகமத்திலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் சுட்டிக் காட்டுகிறார். இந்த 10-நாள் வாசிப்புத்திட்டத்தில் விசுவாசம் மற்றும் சந்தேகத்தைப் பற்றி ஆராயுங்கள்.

கிறிஸ்துமஸ்காக (கிறிஸ்துவுக்காக) காத்திருத்தல்
10 நாட்களில்
கிறிஸ்துமஸ்ஸை ஒரு பரபரப்பான காலமாக நாம் நினைக்கிறோம், ஆனால் இந்த விடுமுறையின் உண்மையான அர்த்தம், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நமது இரட்சகரின் பிறப்பே ஆகும். இந்தப் 10 நாள் பயணத்தில் எங்களுடன் இணைந்து, நாமும் (கிறிஸ்து)மஸுக்காகக் காத்திருப்போம்.

காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம்
19 நாட்கள்
இந்த மூன்று வாரத் திட்டம், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நமக்காக எப்படி வந்தார் என்ற காலவரம்பற்ற அதிசயத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தத் திட்டம் திங்கட்கிழமை தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு வார இறுதியில் விடுமுறைக் காலத்தில் ஓய்வு மற்றும் பிரதிபலிப்புக்கான குறுகிய உள்ளடக்கம் இருக்கும். கிறிஸ்துவின் பிறப்பு நமது எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான அர்த்தம் என்ன என்பதைப் படிக்கும்படி எங்களுடன் சேருங்கள்.