இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 23:1

தெளிவாக சிந்திக்க போதுமான இடம்
5 நாட்கள்
எல்லாவற்றையுமே செய்ய வேண்டுமென்று முயற்சிக்கும் காரணத்தால், எந்த விஷயத்திலும் விருப்பம் இல்லாதது போல நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா? இந்த வாழ்க்கைப் பயணத்தில் விரும்பியவருடன் பற்பலவற்றை ஒரேநேரத்தில் செய்கிறோம். . .நீங்கள் திறமையாளர்தான். ஆனால் சோர்வடைந்துவிடுகிறீர்கள். அத்தகைய நேரத்தில் காற்றோட்டமான ஒரு அறை உங்களுக்கு சிறிது தேவைப்படும். ஒரு சாதாரணமான ஆனால் ஆச்சரியமான வரவேற்பின் மூலம், கர்த்தர் உங்களுடைய அதிவேகத்தை சமாதானம் நிறைந்த ஒன்றால் இறுதியாக மாற்றியமைக்க வழிவகை வழங்குகிறார். இந்த திட்டம் அதை எப்படியென காண்பிக்கும்.

பெருந்தோற்று காலங்களில் நம்பிக்கை
5 நாட்கள்
சமீபகாலமாக இதுவரை உலகம் பார்த்திராத ஒரு சூழ்நிலையில் இன்று நாம் கடந்து போய்கொண்டிருக்கிறோம். சர்வத்தையும் படைத்து ஆளுகிற ராஜாதி ராஜாவை அண்டிகொண்டால் பிழைத்துகொள்வோம் என்பதை சரித்திரமும் ஒத்துகொள்ளும். இப்படிப்பட்ட காரியங்கள் ஏன் சம்பவிக்கிறது, இந்த சூழ்நிலையில் தேவன் நமக்கு தரும் தீர்வு என்ன, மரணமானாலும் ஜீவனானாலும் அவைகளை குறித்த நமது நம்பிக்கை என்ன என்பதை குறித்து வேதம் நமக்கு என்ன கற்றுகொடுக்கிறது ஆகிய காரியங்களை குறித்து இந்த தியானத்திட்டதின் கீழ் நாம் படிக்க இருக்கிறோம்.

மீட்பைத் தெரிவு செய்யுங்கள்
5 நாட்கள்
இயேசுவைப் போல மாறும்படிக்கு நாம் அனுதினம் புதிதாக்கப்படுவதிலும், மறுரூபமடைவதிலும் தேவனுடைய ஆவியானவர் ஈடுபாடு கொண்டிருக்கிறார். இந்தப் புதிதாக்கும் செயலின் அங்கமாகிய மீட்பு என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக உள்ளது. அது இல்லாதபட்சத்தில், நம்மால் பழைய மாதிரிகள், மனப்பான்மைகள், பழக்கங்கள் மற்றும் நடத்தைகளிலிருந்து விடுபட முடியாது. வாழ்நாள் மீட்புப் பயணத்தின் முதல் அடிகளை எடுத்து வைக்க இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்
6 நாட்களில்
கர்த்தர் என் மேய்ப்பராய் ... என்று நான் ஆரம்பிக்கும் போதே இந்த வாக்கியத்தை - உங்கள் உதடு முழுவதும் சொல்லி முடித்திருக்கும் என்பதை நான் அறிவேன். தாவீது சொன்ன இந்த வாக்கியத்திற்குள் ஓர் இரகசியம் இருக்கின்றது; அந்த இரகசியம் -உங்கள் வாழ்க்கையை மறுரூபம் [TRANSFORM] ஆக்கும் என்று நான் சொன்னால் – ”இனிமேல் என்மனசுக்கு கஷ்டமா இருந்தா - சங்கீதம்23 ஐ எடுத்து வாசிப்பேன்”, என்று இல்லாமல் - எப்படி வாழ்க்கையை இனி நடத்துவீர்கள் என்பதை மாற்றி அமைக்கும் ஒரு வெளிப்படுத்தலை -இந்த சங்கீதம் நமக்கு தரும். இன்றைக்கு உங்கள் முன்பாக நிற்கின்ற ”கோலியாத்” தான் என்ன? <இந்த சவாலை நான் எப்படி சந்திப்பேன்? சமாதானத்தைத் தேடி அலைபவரா நீங்கள்? இதில் எனக்கு யார் ஐயா வழிகாட்டி [guide], வழிநடத்துவார்கள் [lead] என்ற கேள்வியா?> இந்த சங்கீதத்தின் வார்த்தைகளில் இருக்கும் ”வாழ்க்கையை புரட்டி போடும் சத்தியங்களை” நாம் இந்த வேதாகம திட்டத்தின் -மூலம் உள்வாங்கிக் கொள்ளலாம் - வாருங்கள்!

தேவனுக்கு செவிக்கொடுத்தல்
7 நாட்கள்
ஏமி க்ரோஷெல் எழுதிய இந்த ஏழு நாள் வேதாகம திட்டம், நம் அன்பு பிதாவின் இருதயத்திலிருந்து நேராக உங்களுக்கு எழுதப்பட்டுருக்கிறது என்று நம்புகிறோம். அவர்களுடய ஜெபம், நீங்கள் எல்லா எதிர் சத்தங்களையும் தவிர்த்து அவரது குரலில் கவனம் செலுத்தி விழித்துக்கொள்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறது.