இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 5:16

டோனி எவன்ஸ் இன நல்லிணக்கத்தை ஆராய்கிறார்
3 நாட்கள்
ஒற்றுமைக்கு பதிலாக, பலர் பிற இனங்களை சகித்துக்கொள்கிறார்கள். அவர்கள் உண்மையில் ஒரு உறவில் நுழைய எந்த விருப்பமும் இல்லாமல் மற்றவர்களுடன் வெறுமனே ஈடுபடுகிறார்கள். இந்த 3 நாள் வாசிப்பு திட்டத்தில், டாக்டர் டோனி எவன்ஸ் இன சகிப்புத்தன்மையிலிருந்து விலகி நல்லிணக்கத்தை நோக்கி செல்ல நமக்கு உதவுவார். உண்மையான வேதாகம நல்லிணக்கத்திற்கான வழிகள் மற்றும் இயேசு கிறிஸ்துவினுடன் ஒரே உடலாக அமையும் உண்மையான ஒற்றுமைக்கு இது ஏன் முக்கியமானது என்பதையும் விவாதிப்போம்.

உப்பும் வெளிச்சமும்
5 நாட்கள்
இயேசு கிறிஸ்து சபையை இந்தப் பூமிக்கு உப்பாய் இருக்கும்படியாகவும், இந்த உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கும்படியாகவும் அழைத்திருக்கிறார். நிறைவான வாழ்க்கை வாழ இந்த இரண்டு காரியங்களும் மிகவும் அவசியமானவை. கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை பாதையில் நாம் எப்படி உப்பாகவும், வெளிச்சமாகவும் இருக்க முடியும் என்பதை இந்த வேதப்பாடம் மூலமாக கற்றுக்கொள்வோம்.

அன்பில் வளருதல்
5 நாட்கள்
தேவனை நேசிப்பதும் மற்றவர்களை நேசிப்பதும் உண்மையில் முக்கியமானது, ஆனால் அதை எவ்வாறு திறம்பட செய்வது? உண்மை என்னவென்றால், நம் சொந்த முயற்சியில் நாம் மக்களை நன்றாக நேசிக்க முடியாது. ஆனால் நாம் தேவனைப் பார்த்து, மனத்தாழ்மையில் நம்மைக் கிடக்கப்பண்ணும் போது, தேவனின் உண்மையான மற்றும் வல்லமை வாய்ந்த அன்பிலிருந்து நாம் வாழ முடியும். இந்த 5 நாள் வேதாகமத் திட்டத்தில் அன்பில் வளர்வது பற்றி பாஸ்டர் ஏமி க்ரோஷெல் மூலம் மேலும் அறிக.

உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!
6 நாட்கள்
நாம் எடுக்கும் அநேக தீர்மானங்கள், சில காரியங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். ஆயினும், ஒரே ஒரு தீர்மானம்தான் மிக முக்கியமானது. இந்த அசாதாரணமான, தேவனுடைய இலவசப் பரிசான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் தீர்மானத்தைப்பற்றிய ஆழமான புரிதலுக்கு ஓர் எளிய வழிகாட்டியைத் தேடிக் கொண்டிருப்பீர்களேயானால், இங்கே தொடங்குங்கள். – டேவிட் ஜே. ஸ்வாண்ட்’ எழுதிய “ இந்த உலகுக்கு வெளியே; வளர்ச்சிக்கும் இலக்குக்குமான ஒரு கிறிஸ்தவ வழிகாட்டி”

போ, செய், சொல், கொடு: இயேசு கிறிஸ்துவினிடம் சரண் அடைவதில் உள்ள சுதந்திரம்
7 நாட்கள்
இயேசுவிடம் அர்ப்பணிப்பது என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் தருணம். ஆனால் இந்த தீர்மானம் எதை குறிக்கிறது மற்றும் நாம் தினந்தோறும் அதன்படி எப்படி வாழப் போகிறோம்? இது வாழ்க்கையில் நாம் எடுக்கும் பெரிய தீர்மானங்களுக்கு மட்டும்தானா அல்லது ஆவிக்குரிய மனிதனுக்கா? பயம், பழைய தோல்விகள் மற்றும் புரிந்துகொள்ள முடியாமை போன்றவை நம்மை தடுக்கக் கூடும். "போ செய் சொல் கொடு" என்பது ஒரு உறுதிமொழி/ ஜெபம் அது உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அடுத்து என்ன அடி எடுத்து வைக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும். இயேசு உடனே கூடவரும் விடுதலையை உணருங்கள்

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள்!
7 நாட்கள்
மகிழ்ச்சியான, குறிக்கோள் நிறைந்த வாழ்க்கை, உறவுகளின் மேலும், அன்பு, விசுவாசத்தின் மேலும் கட்டியெழுப்பப்படுகிறது. உங்கள் வாழ்க்கைக்கான திட்டத்தைக் குறித்து அதிகத்தெளிவு தேவையானால், உங்களது தேடுதலும், வெளிப்பாடுகளும் இன்னும் கூர்மையாவதற்குக் கீழ்க்கண்ட வாசிப்புத்திட்டத்தைப் பின் இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்
7 நாட்கள்
நாம் அனைவரும் எதையாவது நாடிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஒரு சிறந்த வேலை, ஒரு வசதியான வீடு, சரியான குடும்பம், மற்றவர்களின் ஒப்புதல் இவைகள் போன்ற பொதுவாக நம்மால் அடையமுடியாதவைகளின் பின்னே சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் இது சோர்வுறப் பண்ணுகிறதாய் இல்லை? வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா? Life.church இன் இந்தப் புதிய வேதாகமத் திட்டத்தில், இணை போதகர் க்ரெய்க் க்ரோஷெலின் 'அடைய முடியாதவற்றை அடைய முயற்சித்தல்' என்ற செய்தித் தொடரின் வாயிலாக அதைக் கண்டறிவோம்.

20/20: பார்த்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டது. அனுப்பப்பட்டது. கிறிஸ்டின் கெய்ன் மூலம்
7 நாட்கள்
தேவன் உங்களை காண்கிறார் என்கிற உணர்வை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? உங்கள் அன்றாட, சாதாரண வாழ்க்கை குறிப்பிடத்தக்க நித்திய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? கிறிஸ்டின் கெய்னின் இந்த 7-நாள் தியானத்திட்டம், தேவன் உங்களை எப்படிப் காண்கிறார், எப்படி உங்களைத் தேர்ந்தெடுத்தார், அதுமட்டுமல்லாது மற்றவர்களை எப்படி பார்க்க அனுப்பினார், மேலும் தேவன் அவர்களைப் பார்க்கும் விதத்தை 20/20 நோக்கோடு பார்க்க உதவும்.

Walk With Jesus - நம்முடைய ஆறுதல்
7 நாட்கள்
நீங்கள் துன்பத்தின் பாதையில் நடக்கும்போது யார் எனக்கு ஆறுதல் செய்வார் என அங்கலாய்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு ஒருவரே சீயோனுக்கு ஆறுதல் செய்கிறவர். அவரே சிறுமைப்பட்டிருக்கிற நமக்கு ஆறுதல் செய்ய முடியும். உங்கள் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், அவருடைய ஆறுதல்கள் உங்கள் ஆத்துமாவைத் தேற்றி, உங்கள் வனாந்தர வாழ்க்கையை ஏதேனைப் போலவும், கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் மாற்றி மலரச் செய்யும்.

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி
7 நாட்களில்
உங்கள் வாழ்க்கையிலும் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் ஆண்டவர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த உங்களைத் தடுத்து நிறுத்தமுடியாத ஒரு நபராக மாற்றும் ஏழு குணங்களைக் கண்டறிய இந்த ஒரு வாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்
10 நாட்கள்
சமநிலை. இது நாம் நமது வாழ்வில் கேட்கும்"கடினமாக உழையுங்கள்!" என்ற சத்தங்களின் மத்தியிலும் "இன்னும் ஓய்வுக்கொள்ளுங்கள்" என்ற முறுமுறுப்புகளின் மத்தியிலும், அதிகமாக ஏங்கும் ஒரே காரியம். நமது வாழ்விற்கான தேவனின் திட்டம் அது அல்லது இதுவாக இருந்தால் என்ன செய்வீர்கள்? பரிசுத்த யுதத்திற்குள் சேருங்கள்-கடின உழைப்பின் வாழ்க்கை மற்றும் நன்கு ஓய்வெடுக்கும் தேவனை கௌரவிக்கும் வழிகள்.

சாரமும் பிரகாசமும் - பாக்கிய வசனங்களிலிருந்து ஒரு வேத ஆராய்ச்சி
10 நாட்கள்
நாம் இப்போது இருக்கும் வாழ்வின் காலம் எதுவாக இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நாம் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த பாதிப்பானது இயேசுவை அனுபவிக்கச் செய்யும் அல்லது, குறைந்தபட்சம் நம்மில் இருக்கும் வித்தியாசம் என்ன என்ற ஆர்வத்தையாவது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடும். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் இயற்கையாகவே கர்த்தரின் நறுமணத்தையும் வண்ணங்களையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதுவே எங்கள் ஜெபம் ஆகும்.

கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்
25 நாட்கள்
இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.