இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 4:2

உண்மையாகவே என்னால் பாவ சோதனைகளை மேற்கொள்ள முடியுமா?
5 நாட்கள்
"நான் ஏன் அந்த பாவத்தோடு கூட போராடி கொண்டிருக்கிறேன்" என்று என்றைக்காவது உங்களை பார்த்து நீங்களே கேட்டிருக்கிறீர்களா? ரோமர் 7:15 -ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் பாருங்கள்: "நான் விரும்புகிறதை செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்". நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றத்தை தடை செய்யும் இந்த பாவங்களை நாம் செய்யாமல் இருப்பது எப்படி? பாவம் செய்யாத வாழ்க்கை உண்மையில் சாத்தியமா? இந்த தியான திட்டத்தில் பாவத்தை குறித்தும் சோதனைகளை குறித்தும், பிசாசை குறித்தும், மிக முக்கியமாக தேவனுடைய அன்பை குறித்தும் நாம் தியானித்து கற்றுக்கொள்ள இருக்கிறோம்.

போர்வீரன்
6 நாட்கள்
நம் அனைவருக்குள்ளும் வலுவான, எதற்கும் பணியாத, தைரியம் நிறைந்த ஒருவர் முக்கியமான காரணங்களுக்காக போராட தயாராக இருக்கிறார். லைப்.சர்ச் வழங்கும் இந்த வேதாகம திட்டம் போதகர். கிரெய்க் குரோஷெலின் போர்வீரன் என்னும் தொடரோடு இணைந்து உங்களை உங்கள் வாழ்வின் நோக்கத்தை கண்டறிந்து, தயக்கங்களை அகற்றி, காயங்களிலிருந்து குணமாகி, உங்களை சீர்படுத்தி வாழ்வில் ஒரு வெற்றியாளராக உங்களை உயர்த்த உதவும்.

வாழ்க்கை மாற்றப்பட்டது: அடையாளத்தைத் தழுவுதல்
6 நாட்கள்
நாம் யாராக இருக்க வேண்டும் என பல குரல்கள் சொல்கையில், நமது அடையாளத்தை குறித்து நாம் போராடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேவன் நமது வேலையை வைத்தோ, திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கொண்டோ, நமது தவறுகளைக் கொண்டோ நம்மை வரையறுக்க விரும்பவில்லை. நம் வாழ்வில் அவருடைய கருத்தே உயரிய அதிகாரம் இருக்க வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார். இந்த ஆறு நாள் திட்டம் வேதம் நீங்கள் யார் என்று சொல்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் அதை தழுவிக் கொள்ளவும் உதவும்.

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்
6 நாட்களில்
ஜெபம் மற்றும் உபவாசம் என்பது ஜெபத்தில் கவனம் செலுத்துவதற்கும், தேவனுடனான ஒருவரின் தொடர்பை ஆழப்படுத்துவதற்கும் தானாக முன்வந்து உணவைத் தவிர்ப்பதை வெளிப்படுத்துகிறது. அவை தனித்தனியாகவும் நிகழலாம், அவற்றின் கலவையானது செயல்திறனை அதிகரிக்கிறது. ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் நேரம் ஒதுக்குவது என்பது தனிப்பட்ட ஆசைகளுக்காக தேவனை தேடுவதல்ல, மனத்தாழ்மையுடன் தேவ பலத்திற்காக ஞானத்திற்காக தன்னை மையப்படுத்தி அவரைச் சார்ந்திருப்பது மத்த எல்லாவற்றையும் தவிர்த்து தேவனை முக்கியப்படுத்தி ஈடுபடும் பொதுச் செயல். ஆன்மீக வளர்ச்சியையும் தேவ நம்பிக்கையும் ஆழப்படுத்திக் கொள்ள உபவாச ஜெபம் உதவி செய்கிறது.

முக்கியமான விஷயங்களுக்கு இடத்தை உருவாக்குங்கள்: தவக்காலத்திற்கான 5 ஆன்மீகப் பழக்கங்கள்
7 நாட்கள்
தவக்காலம்: சிந்தனை மற்றும் மனந்திரும்புதல் இவற்றிக்கான 40 நாட்காலம். இது ஒரு நல்ல சிந்தனை, ஆனால் தவக்காலத்தை கடைபிடிப்பது உண்மையில் எப்படி இருக்கும்? அடுத்த ஏழு நாட்கள் உங்கள் இதயத்தைத் உயிர்த்தெழுதல் ஞாயிறு மற்றும் அதன் பிறகும் தயார்படுத்த உதவும் ஐந்து ஆன்மீகப் பழக்கவழக்கங்களை கண்டறியலாம்.

லெந்து - காலங்களின் பிரதிபலிப்பு
13 நாட்கள்
தியாகம், மீட்பு மற்றும் தெய்வீக அன்பின் ஆழமான ரகசியங்களை ஆராய்வதன் மூலம், லெந்துக்காலங்கள் பற்றிய தொடரில் பரிசுத்தப் பயணத்தைத் தொடர்வோம். யோவா 15:13-ன் படி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” இயேசுவைப்போல பிறருக்காக உயிரைக் கொடுத்ததில் உண்மையான அன்பு காணப்படுகிறது. வனாந்தரத்தில் கிறிஸ்துவின் சோதனை நேரத்தை பிரதிபலிக்கும் இந்த அனுபவத்தை நாம் கவனிக்கும்போது நமது வாழ்க்கையிலும் துணிவு, தியாகம், பரிசுத்தம் இவற்றை எதிரொலிக்கும் பாடங்களைப் பற்றி அறிய முயல்வோம். இந்த ஆன்மீக தொடரில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.