இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 3:16

நேசியுங்கள், தொடர்ந்து நேசியுங்கள்
3 நாட்கள்
அன்பை கொண்டாடுவது என்பது ஒரு குறிப்பிட்ட தேதிக்கு அப்பாற்பட்டது; கடவுளின் அன்பு குணப்படுத்தவும், மீட்டெடுக்கவும், அவருடைய நன்மையை அறிவிக்கும் ஒரு வாழ்க்கையை நமக்கு வழங்கவும் வந்தது என்பதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு நினைவூட்டும் வாழ்க்கை அது. அன்பு எதைப் பிரதிபலிக்கிறது மற்றும் கடவுள் விரும்புவதைப் போல மற்றவர்களை நேசிப்பது எப்படி இருக்கும் என்று மூன்று நாள் ஆய்வுக்கு செல்ல உங்களை அழைக்கிறேன்.

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்
3 நாட்களில்
AIRBUS A330 - விமானத்தில் நாம் யாவருமே- ”இப்பொழுதும், எப்பொழுதும் - பயணித்துக்கொண்டிருக்கிறோம்” என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? நாம் வாழும் புவியைத்தான் சொல்கின்றேன். இப்பொழுது பூமி தன்னைதான் சுற்றும் வேகம் ஒருமணி நேரத்திற்கு-1600கி.மீ. பூமியின் எடை 60 ட்ரில்லியன் டன். இந்த பருப்பொருள் -தினமும் 520 இலட்சம் கி.மீ. பயணிக்கின்றது. இதில் விசேஷம் என்னவென்றால், இதன்வேகம் சீராக – எப்பொழுதும் இருக்கின்றது என்பது தான். ஏனென்றால் இது பயணிக்கும் வேகம் குறைந்தாலும் பிரச்சினை; கூடினாலும் நமக்கு பிரச்சினை என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த கனமான பருப்பொருள் பயணிக்க எரிசக்தியை-தொடர்ந்து தருவது எது? ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் .... பூமியை சிருஷ்டித்தார் என்ற - வாக்குமாறாத - தேவனுடைய - வார்த்தை தான். பரிசுத்த வேதாகமத்தில்- தேவன் தமது ” வார்த்தை யினால்” என்ன அற்புதங்களை - நிறைவேற்றிக்கொண்டே இருக்கின்றார்- என்பதை நாம் காணும் போது - நம்முடைய விசுவாசம் நிச்சயம் பெலப்படும். (வி)சுவாசிக்க வாங்க! ________________________________________

கிறிஸ்துமஸ் கதை
5 நாட்கள்
ஒவ்வொரு நல்ல கதைக்கும் ஒரு திருப்பம் இருக்கும்— அந்த எதிர்பாராத தருணம் எல்லாவற்றையும் மாற்றும். வேதாகமத்தின் மிகப்பெரிய திருப்பங்களில் ஒன்று கிறிஸ்து பிறப்பு. அடுத்த ஐந்து நாட்களில், இந்த ஒரு நிகழ்வு உலகை எப்படி மாற்றியது மற்றும் இன்று உங்கள் வாழ்க்கையை எப்படி இக்கதை மாற்றும் என்பதை ஆராய்வோம்.

ஏன் ஈஸ்டர்?
5 நாட்கள்
ஈஸ்டரைக் குறித்த மிகவும் முக்கியமானது என்ன? ஏன் 2000 வருடங்களுக்கு முன் பிறந்த ஒரு மனிதர் மீது இவ்வளவு அதிகமான ஆர்வம்? ஏன் பல மக்கள் இயேசுவைக்குறித்து உற்சாகமாக உள்ளனர்? ஏன் நமக்கு அவர் தேவை? எதற்காக அவர் வந்தார்? எதற்காக அவர் மரித்தார்? எதற்காக இவற்றை கண்டுபிடிக்க யாரும் முயல வேண்டும்? இந்த 5-நாள் திட்டத்தில், நிக்கி கும்பெல் அவர்கள் இதே கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை பகிர்கிறார்.

எதிர்பார்ப்பின் கிறிஸ்மஸ்: ஒரு 5-நாள் அட்வென்ட் திட்டம்
5 நாட்கள்
பெரும்பாலும் கிறிஸ்மஸுக்கு நம் இதயங்களைத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பே விடுமுறைகள் வந்து போய் விடும். அட்வென்ட் என்பது கடவுள் நம்முடன் வந்தார், இன்னும் நம்முடன் இருக்கிறார், மீண்டும் வருவார் என்பதை நினைவில் கொள்வதற்கான வழி. அடுத்த 5 நாட்களில், நம்பிக்கை, அமைதி, அன்பு மற்றும் மகிழ்ச்சி ஆகிய நான்கு அட்வென்ட் கருத்துக்களை ஆராய்வோம்.

கனல் எரி: துணிச்சல்மிகு பிரார்த்தனைக்கு ஓர் எளிய வழிகாட்டுதல்
6 நாட்கள்
பரலோக பிதாவுடன் உறவு கொள்வதற்கான அற்புதமான வாய்ப்பாக ஜெபம் அமைகிறது. இந்த 6 நாள் திட்டத்தில், ஜெபம் பற்றி இயேசு நமக்கு என்ன கற்றுத் தந்தார் என்பதை நாம் கண்டறிவோம் மேலும் நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் தொடர்ந்து ஜெபம் செய்ய ஊக்குவிக்கப்படுவோம்.

இயேசு என்னை நேசிக்கிறார்
7 நாட்கள்
யாரோ ஒருவர், "நான் கிறிஸ்தவனாயிருப்பதற்கு எதை விசுவாசிக்க வேண்டும்?" என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? "இயேசு என்னை நேசிக்கிறார், இதை நான் அறிவேன், ஏனெனில் வேதாகமம் அவ்வாறு சொல்லுகிறது”, என்ற நேசிக்கப்படுகிற பாடலின் வரிகளைக் கொண்டு எதை விசுவாசிக்க வேண்டும் ஏன் என்று பத்திரிக்கையாளராய் இருந்து போதகரானவர் விளக்குகிறார். சிறந்த ஆசிரியர் ஜான் எஸ், டிக்கர்சன் அவசியமான கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் அவை எதனால் முக்கியம் என்பதை உண்மையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

மன்னிப்பு
7 நாட்கள்
சில சமயங்களில் மன்னிப்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. மனுஷீகத்தில் மன்னிப்பது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆண்டவரின் உதவியோடு அது கூடும். மன்னிப்பின்மை நம் வாழ்வில் பல ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருப்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் வேதாகமத்தின் மூலம் மன்னிப்பைப் பற்றி ஆராய்வோம், கற்றுக்கொள்வோம்.

ஆண்டவர் சர்வவல்லவர்
7 நாட்களில்
இந்த 7 நாள் வாசிப்புத் திட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் எவ்வாறெல்லாம் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்த விரும்புகிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும், ஆண்டவரின் வல்லமையின் வெவ்வேறு அம்சத்தைப் பற்றி சிந்தித்து, உங்கள் விசுவாசத்தை மேலும் வளர்த்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

“பலங்கொண்டு திடமனதோடு வாழுங்கள்!
8 நாட்கள்
நீங்கள் தனித்திருக்கவில்லை. வாழ்க்கை எத்தனை சவால்களை நம்மீது எறிந்தாலும், நீங்கள் ஒரு நாள் விசுவாசியோ அல்லது முப்பது நாள் விசுவாசியோ யாராயிருந்தாலும் இந்த உண்மை எல்லோருக்கும் பொருந்தும். இந்த வாசிப்புத் திட்டத்தில் தேவனுடைய உதவியை எப்படிப்பற்றிக்கொள்வது என்று கற்றுக்கொள்ளுங்கள். இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்
12 நாட்கள்
அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்!

லெந்து - காலங்களின் பிரதிபலிப்பு
13 நாட்கள்
தியாகம், மீட்பு மற்றும் தெய்வீக அன்பின் ஆழமான ரகசியங்களை ஆராய்வதன் மூலம், லெந்துக்காலங்கள் பற்றிய தொடரில் பரிசுத்தப் பயணத்தைத் தொடர்வோம். யோவா 15:13-ன் படி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” இயேசுவைப்போல பிறருக்காக உயிரைக் கொடுத்ததில் உண்மையான அன்பு காணப்படுகிறது. வனாந்தரத்தில் கிறிஸ்துவின் சோதனை நேரத்தை பிரதிபலிக்கும் இந்த அனுபவத்தை நாம் கவனிக்கும்போது நமது வாழ்க்கையிலும் துணிவு, தியாகம், பரிசுத்தம் இவற்றை எதிரொலிக்கும் பாடங்களைப் பற்றி அறிய முயல்வோம். இந்த ஆன்மீக தொடரில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.

கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்
25 நாட்கள்
இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.