வாசிப்புத் திட்டங்கள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 17:14

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க.  ரோமர் :12-2    சகோதரன் சித்தார்த்தன்

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

3 நாட்களில்

யுத்தம் என்றால் அது நாடுகளுக்கு இடையே நடப்பது என்று நினைக்காதிருங்க. அனுதினமும் சத்துரு நம் சிந்தையில்– பயம் சந்தேகத்தால் நிரப்பி உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்தவர்களாக வாழு என போராடுகிறான். பட்டயமும் பீரங்கியும் வைத்து நடைபெறும் யுத்தம் அல்ல - இந்த யுத்தம்; இது நம் எண்ணங்களில் அனுதினமும் நடைபெறும் ஒரு யுத்தம்.... ஆனால், நமது தேவன் - புதிய மனம்; மறுரூபம் அல்லது முற்றிலும் மேம்பட்ட வாழ்க்கை வாழும்படி நம்மை அழைத்திருக்கின்றார். இப்பூவுலகில் வாழும் நாம்- பரலோகத்தின் சிந்தைகளை யோசித்துக் கொண்டு இருப்போமானால் நம் மனம் புதிதாகியது என்று அர்த்தம். உங்கள் எண்ணங்கள் தான் உங்களைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை தீர்மானிக்கின்றது. எதைப்பற்றி நீங்கள்-கருத்து முரண்படாமல்- நினைக்கிறீர்களோ அதுதான் - உங்கள் விசுவாசம் ஆக இருக்கும், நீங்கள் போகின்ற திசையை தீர்மானிக்கும் - உங்களைப் பற்றி ”தேவன் தாமே குறித்திருக்கிறவைகளை” - அவருடைய பரிபூரணமான சித்தத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றும் வாங்க - மறுரூபமான வாழ்க்கைக்குள் பிரவேசிக்கலாம்.

ஒற்றுமையின் வலிமை

ஒற்றுமையின் வலிமை

4 நாட்கள்

மற்ற இன மக்களை ஏற்றுகொள்வது என்பது வேறு, அனைவரும் ஒரே இனமாக ஒற்றுமையாக வாழ்வது என்பது வேறு. இன்றைக்கு மக்கள் அநேகர் முந்தின வகையை சேர்ந்தவராகவே இருக்கின்றனர். நம்மை காட்டிலும் வேறுபட்ட இனமக்களையும் நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனாலும் அவர்கள் வேற்றினத்தை சேர்ந்தவர்கள் என்பது நமது சிந்தையில் நீங்காமல் இருக்கும். ஒருவேளை நீங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக சமுக உணர்வுகளில் நடத்தப்படும் பேரணிகள், போராட்டங்களில் கூட கலந்துகொள்பவராக இருக்கலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி நிறைவுறும்போது, அவரவர் தங்கள் தங்கள் வழிகளில் சென்று தங்கள் அலுவல்களை வழக்கம் போல தொடர ஆரம்பித்து விடுவார்கள். எனவே அனைத்து தரப்பு மக்களிடையே வேற்றுமை உணர்வுகள் முற்றிலும் களைந்த உண்மையான ஒற்றுமையை ஏற்படுத்த, 'ஒருவரை ஒருவர் புன்முறுவலோடு சந்திப்பது, வணக்கம் சொல்வது' ஆகிய எளிமையான செயல்களை தாண்டின ஏதோ ஒன்று அவசியப்படுகிறது. இந்த 4 நாட்கள் தியான திட்டத்தில் Dr. டோனி இவான்ஸ் அவர்கள் வேதாகமம் கற்றுக்கொடுக்கும் ஒற்றுமையை குறித்து நமக்கு போதிப்பார்கள்.