இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 10:28

நான் சரணடைகிறேன்: கைதிகளால் எழுதப்பட்ட ஊக்கமளிக்கும் திட்டம்
4 நாட்கள்
பைபிள் மீட்பு, சுதந்திரம் மற்றும் நம்பிக்கையின் புத்தகம். அதன் பக்கங்களுக்குள் ஆற்றல் மிக்க கதாபாத்திரங்கள் உள்ளன. உடைந்த ஆண்களும் பெண்களும் பதில்களைத் தேடுகிறார்கள். ஒருவகையில், அவர்கள் நீங்கள் படிக்கவிருக்கும் பக்திப்பாடல்களை எழுதிய தற்போதைய மற்றும் முன்னாள் கைதிகளைப் போன்றவர்கள். கம்பிகளுக்குப் பின்னால் உள்ள தேவாலயத்தின் குரல்களால் நீங்கள் ஊக்குவிக்கப்படுவீர்கள் என்று நம்புகிறோம். அவர்களின் சாட்சி நம் அனைவரையும் விடுவிக்கட்டும்.

சிலுவையும் கிரீடமும்
7 நாட்கள்
இயேசு கிறிஸ்து, அவர் தன் சிலுவை மரணத்தின் மூலம் பெற்றுத் தந்த இரட்சிப்பு, மற்றும் உயிர்த்தெழுதலின் வாக்குத்தத்தம் ஆகியவற்றை நாம் அறிந்துக் கொள்ளவே புதிய ஏற்பாட்டின் அதிகப்பட்சமான பகுதி எழுதப்பட்டுள்ளது. இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தம், உயிர்த்தெழுதல், மற்றும் உங்களுக்காக பெற்று தந்த நித்திய வாழ்க்கையாகிய பரிசு ஆகியவற்றை இந்த தியானத்தில் டாக்டர். சார்ல்ஸ் ஸ்டான்லி அவர்கள் பகிர்ந்துள்ளார். அவருடன் இணைந்து, இயேசு செலுத்திய விலையை நினைவுக்கூறுவோம், தந்தையின் மகத்தான அன்பின் ஆழத்தை கொண்டாடுவோம்.

தேவன் நம்மோடு
7 நாட்கள்
கிறிஸ்துமஸ் என்பது மிகுந்த மகிழ்ச்சியின் காலம், நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் பிறப்பைக் குறிக்கிறது. இயேசுவின் வருகையைப் பற்றி பைபிள் முழுவதும் பல தீர்க்கதரிசனங்கள் உள்ளன, இந்த தியானம் மூலம், தேவன் வருவதை அறிவிக்க வேதத்தில் தேவன் பயன்படுத்தும் ஏழு பெயர்களைப் பார்ப்போம். இந்த பெயர்களில் ஒவ்வொன்றையும் இயேசு எவ்வாறு உள்ளடக்குகிறார் என்பதையும், அவர் பூமியில் நடந்தபோது இன்றும் நமக்குப் பொருத்தமாக இருப்பதையும் ஆராய்வோம்.

அமைதியில் அமர்ந்திருத்தல்: ஏழு நாட்கள் தேவனுடைய வாக்குத்தத்திற்குள் காத்திருத்தல்
7 நாட்கள்
சில நேரங்களில் தேவன் நமக்கு கொடுத்த வாக்குத்தம் இருக்கும், ஆனால் நம்முடைய வாழ்க்கைக்கும் அந்த வாக்குத்தத்துக்கும் சம்பந்தமே இராது. அல்லது நம் வாழ்வில் முச்சந்தியில் வந்து நின்றிருப்போம், எந்தப்பக்கம் செல்வது என்ற கேள்விக்கான பதிலை தேவன் பேச காத்துக்கொண்டிருப்போம், ஆனால் நமக்கு கேட்பது அவரது மௌனம் மாத்திரம். இந்த 7 நாள் தியானம் தேவன் மௌனமாய் இருக்கும்போது நாம் எப்படி அவரது சித்தப்படி செயல்படுவது என்று போதிக்கிறது.

கிறிஸ்துவைப் பின்பற்றுதல்
12 நாட்களில்
அனுதினமும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வேதாகமத் திட்டம் உங்களுக்கானதுதான். இயேசுவை ஏற்றுகொள்வதுதான் அதற்கான முதல் படி என்பதில் மாற்றம் ஒன்றும் இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, வாழ்நாள் முழுவதும் அவரை மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவரோடு இசைந்து வாழ்வது மிக முக்கியமானதாகும்.