இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எரேமியா 29:11

ஒரு புதிய ஆரம்பம்
4 நாட்களில்
இந்த வேதாகம திட்டம் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் தேவனின் தெய்வீக ஆளுமை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி ஒரு பயணத்தை தொடங்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் தேவன் மீது ஆழமான நம்பிக்கையை வைத்து பயத்தை வெல்வதன் மூலம், ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பெறுவதன் மூலமும், வாழ்க்கை மேலும் இறுதியான சத்துரு என்னும் மரணத்தின் மீதும் அதன் சக்தியையும் கூட வென்றுவிடலாம். கடினமான காலங்களில் நம்பிக்கையைக் புதுப்பித்தலின் மூலம் தேவனின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள இந்தத் திட்டம் உங்களை ஊக்குவிக்கும். புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தோடு கூடிய மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் பலத்தோடு எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்போம்.

துக்கம் வலியைக் கொடுக்கக்கூடியது: விடுமுறைக்கான நம்பிக்கை
5 நாட்கள்
பலருக்கு, விடுமுறைகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன... ஆனால் ஆழ்ந்த துக்கம் அல்லது இழப்பின் காரணமாக விடுமுறைகள் பிரகாசத்தை இழந்து சவாலாக மாறும்போது என்ன நடக்கும்? இந்த சிறப்பு வாசிப்புத் திட்டம், துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலையும் விடுமுறை நாட்களுக்கான நம்பிக்கையையும் பெற உதவும், மேலும் ஆழ்ந்த துக்கத்தின் மத்தியிலும் ஒரு அர்த்தமுள்ள விடுமுறை காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பகிர்ந்து கொள்கிறது.

நிச்சயமற்ற காலங்களில் உறுதி
5 நாட்கள்
நிச்சயமற்ற நிலைமைகளிலும், நிச்சயமானவராய் இருக்கும் தேவன்! நாம் சகோதரர் டேவிட் வில்லா அவர்களுடன் இணைந்து இந்த சமீபத்திய திட்டத்தை நிச்சயமற்ற தன்மை மற்றும் எதிர் மறையைக் கடந்து மிகவும் பெரிய சிறப்பான ஒன்றை அடைவதற்காக தியானிக்க இருக்கிறோம்.

வாழ்க்கை மாற்றப்பட்டது: கிறிஸ்துமஸில்
5 நாட்கள்
எல்லா விடுமுறை சலசலப்புகளிலும், நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்பதை எளிதாகப் பார்க்க முடியாது. இந்த 5-நாள் வருகைத் திட்டத்தில், இயேசுவின் பிறப்பால் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஆகியவற்றில் நாம் மூழ்குவோம். தேவன் யார் என்பதைப் பற்றி மேலும் அறியும்போது, நம்பிக்கை, நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் அமைதியுடன் விடுமுறைக் காலத்தில் வாழ்வது எப்படி என்பதைக் கண்டுபிடிப்போம்.

நம்மில் தேவனின் திட்டம்
5 நாட்களில்
நம்மில் தேவனின் திட்டம் என்பது நாம் இழந்து போன தேவனின் பிள்ளைகள் என்ற முழுமையான நிலையை மீண்டும் பெறுவதாகும். தேவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு, தேவன் நம்மை உருவாக்கும் போதே நமக்கு தந்தருளின இயல்பான வலிமைகள், திறமைகள் இவற்றை உரிமைப் படுத்தி விசுவாசத்தில் செயல்படுவதற்கு வழி காட்டுவது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் தேவனின் பரிபூரண சித்தத்துடன் இணைந்து தேவனுடைய அழியாத வாக்குறுதிகளில் நம்பிக்கை உடையவர்களாக விசுவாசத்துடன் தொடர்ந்து வாழ கிருபை பெற்றுக்கொள்கிறோம். நமது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் நாம் ஆன்மீக உன்னத அந்தஸ்தை இழந்து விட்டோம். தேவன் நம் ஒவ்வொருவருக்காக திட்டம் பண்ணின வாழ்க்கையை நோக்கி நம்பிக்கையுடன் செல்லுவோம்.

ஆண்டவர் உங்கள் வாழ்க்கைக்கு வைத்திருக்கும் திட்டம் என்ன?
6 நாட்களில்
இந்த திட்டத்தில் எரேமியா 29:11ல் உள்ள வசனத்தை நாம் ஆழமாக தியானிக்க துவங்குவோம். வேதாகமத்திலேயே நான் மிகவும் நேசிக்கும் ஒரு வசனம் தான் இது. "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்; "அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." ஒவ்வொரு நாளும் நம்முடைய விசுவாசத்தில் நாம் இன்னும் அதிகமாக வளர, இந்த வசனத்தின் ஒவ்வொரு பகுதியையும் விரிவாகப் படித்து அதிலிருந்து போதனைகள் மற்றும் விதிமுறைகளைப் பெற்றுக்கொள்வோம்.

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்
6 நாட்களில்
எரேமியா 29:11, வேதாகமத்தில் நான் அதிகமாக நேசிக்கும் ஒரு வசனம்: "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே". ஒவ்வொரு நாளும், இந்த அற்புதமான வசனத்தின் ஒரு பகுதியை விரிவாகப் படிப்போம், அதிலிருந்து போதனைகள் மற்றும் கொள்கைகளை அறிந்துகொண்டு நமது விசுவாசத்தில் மேலும் வளர்வோம்!

பளு அதிகம் இல்லாத பயணம் செய்
7 நாட்கள்
மும்முரமான கிறிஸ்துமஸ் காலத்தில், நம்மில் அநேகர் குடும்ப உறவுகள், பண பிரச்சனைகள், அவசர முடிவுகள் மற்றும் ஏமாற்றமளிக்கும் எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை உணருகிறோம். ஆகவே தொடர்ந்து வாசியுங்கள். பொறுமையாக ஒரு மூச்சு விடுங்கள். இந்த 'Life Church' இன் வேதாகம திட்டத்தை வாசித்து தேவன் நாம் சுமக்க சொல்லாத அநேக பாரங்களை நாம் சுமந்து கொண்டிருப்பதை உணருங்கள். இந்த பாரங்களை இறக்கி வைத்துவிட்டால் என்ன? பளு அதிகம் இல்லாத பயணம் செயலாம்.

ஒரே விஷயம்
7 நாட்கள்
இந்த மனதை உலைக்கும் உலகில் இயேசுவுக்காக வாழ்வது என்னவென்று நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். இந்த உலகம் ஒரு நூறு மைல்கல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது, நமக்குத் தேவையானதை விடக் கூடுதல் தகவல்கள் நம்முடைய கைகளில் உள்ளன. இது நவீன உலகத்தின் இயல்பா? இப்படிப் பறக்கிற சூழலில் நம்மை எப்படி நிதானப்படுத்திக் கொள்வது? சங்கீதம் 27:4 இல் அதற்கான பதில் உள்ளது – ஒரே ஒரு விஷயம், அந்திரேயா கார்ட்லெஜ்.

உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்
7 நாட்கள்
ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் யாவும் உனக்கு மெய்யாகவே நிறைவேறுமா என்று நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? ஆம்! ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் நித்தியமானவை, உன் எல்லா சூழ்நிலைகளிலும் உனக்கு அவைகள் உண்மையானதாகவே இருக்கும். நீ ஆண்டவரை விசுவாசித்து, தினமும் அவருடன் நடக்கும்போது, அவர் உனக்காக வைத்திருக்கும் 7 வாக்குத்தத்தங்களையும் எப்படி பெற்றுக்கொள்வாய் என்பதை பற்றியதே இந்த வாசிப்பு திட்டம்.

ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்: சமாதானம் - ஆவியில் வாழ்க்கை
30 நாட்கள்
சமாதானம்: லைஃப் இன் தி ஸ்பிரிட் என்பது உலகின் மிக பிரியமான ஆவிக்குரிய தியான எழுத்தாளரும் மை உட்மோஸ்ட் ஃபார் ஹிஸ் ஹைஸ்டெஸ்ட்டின் ஆசிரியருமான ஓஸ்வால்ட் சேம்பர்ஸின் படைப்புகளின் மேற்கோள்களின் தூண்டுதலான கருவூலமாகும். தேவனில் இளைப்பாறுதலைக் கண்டுபிடித்து, உங்கள் வாழ்க்கையில் தேவ சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.