அப்போஸ்தலர் 1:10-11
அப்போஸ்தலர் 1:10-11 TRV
இயேசு சென்றுகொண்டிருக்கையில், அவர்கள் வானத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு அங்கே நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது வெள்ளை உடை அணிந்த இருவர் திடீரென அவர்கள் அருகே வந்து நின்று, “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்? உங்களிடம் இருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவராகிய இயேசு, எவ்விதமாகப் பரலோகத்திற்கு போகின்றார் என்பதைக் காண்கின்றீர்களே! அவ்விதமாகவே அவர் திரும்பவும் வருவார்” என்றார்கள்.



