لۆگۆی ئەپی پەرتووکی پیرۆز
ئایکۆنی گەڕان

சங் 48

48
சங்கீதம் 48
கோராகின் மகன்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்.
1யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும்,
தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
2வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது,
அதுவே மகாராஜாவின் நகரம்.
3அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
4இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள்.
5அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
6அங்கே நடுக்கங்கொண்டு,
பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள்.
7கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
8நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய யெகோவாவின் நகரத்திலே கண்டோம்;
தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா)
9தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே,
உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
10தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல
உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது;
உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது.
11உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக,
யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக.
12சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள்.
13பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக,
அதின் சுவரை கவனித்து,
அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள்.
14இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்;
மரணம்வரை நம்மை நடத்துவார்.

دیاریکراوەکانی ئێستا:

சங் 48: IRVTam

بەرچاوکردن

لەبەرگرتنەوە

بەراوردکردن

هاوبەشی بکە

None

دەتەوێت هایلایتەکانت بپارێزرێت لەناو ئامێرەکانتدا> ? داخڵ ببە