நிகரில்லாத நன்றியுணர்வை பற்றிய 7 கதைகள்மாதிரி

நிகரில்லாத நன்றியுணர்வை பற்றிய 7 கதைகள்

7 ல் 1 நாள்

நன்றியுடன் இருப்பது : பின் யோசனையின் முன்னுரிமையா?

அமெரிக்கவில் ஸ்தோத்திர பண்டிகை (Thanksgiving) வருடம்தோறும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இது பரவலாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆனாலும், இதன் பின்னணியில் உள்ள நன்றி செலுத்தும் எண்ணம் மிகவும் வேதாகமப்பூர்வமானது. இதை நாம் அனைவரும் தினமும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

வாழ்க்கை நன்றாக இருக்கும்போதும், ஆசீர்வாதங்களைக் கண்ணால் காண முடிவதாலேயும் நன்றி உணர்வு இயல்பாகவே வந்துவிடும். ஆனால், நாம் அதையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்று வேதாகமம் சொல்கிறது:

"எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது". – 1 தெசலோனிக்கேயர் 5:16-18, TAOVBSI

அதனால்தான், இந்த வாரம், நன்றி செலுத்துவதற்குச் சாத்தியமே இல்லாத சூழ்நிலைகளில் மக்கள் தேவனுக்கு நன்றி செலுத்திய ஏழு அசாதாரணமான வேதாகமக் கதைகளில் நாம் கவனம் செலுத்தப் போகிறோம்.

சங்கீதம் 69-ல் (TAOVBSI) உள்ள தாவீது ராஜாவிடமிருந்து நாம் தொடங்கலாம்.

இங்கே தாவீது மிகவும் கஷ்டமான, துயரமான நிலையில் இருக்கிறார்—பிரச்சனைகளில் மூழ்கி, கேலி செய்யப்பட்டு, களைப்படைந்து காணப்படுகிறார். அவர் எழுதுகிறார்:

"நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்க வேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்க வேண்டியதாயிற்று". – சங்கீதம் 69:4 TAOVBSI

அவர் அப்பட்டமான அநீதியையும் பொய்க் குற்றச்சாட்டுகளையும் சந்தித்தார் என்பது தெளிவாகிறது. ஒருவேளை இஸ்ரவேல் தன்னை ராஜாவாக ஏற்றுக்கொள்ள மறுத்தபோது (1 சாமுவேல் 19 TAOVBSI) சவுலுக்குப் பயந்து ஓடும்போது அல்லது தன் மகன் அப்சலோம் தனக்கு எதிராகத் திரும்பிய பிறகு (2 சாமுவேல் 15 TAOVBSI) இதை அவர் எழுதியிருக்கலாம்.

சூழல் எதுவாக இருந்தாலும், தாக்குதலுக்கும், துரோகத்துக்கும், சோர்வுக்கும் ஆளாவது எப்படி இருக்குமென்று தாவீதுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால், இதில் உள்ள வித்தியாசம் என்னவென்றால்: அந்த அநியாயமான துன்பத்தின் நடுவிலும், தாவீது தேவனுக்கு நன்றி செலுத்தினார்.

"நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப் பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்". – சங்கீதம் 69:29-31 (TAOVBSI)

நன்றி செலுத்துவது தேவனை எவ்வளவு பிரியப்படுத்தும் என்பதை தாவீது புரிந்துகொண்டார். நன்றியறிதலை அவர் முக்கியத்துவப்படுத்தினார், அது கடைசி சிந்தனையாக இருக்கவில்லை.

இது நமக்கும் ஒரு அழகான நினைவூட்டலாகும்: நன்றி செலுத்துதல், அதிலும் குறிப்பாக வாழ்க்கை நியாயமில்லாதது போல் தோன்றும்போது, அது நாம் தேவனுக்குக் கொடுக்கக்கூடிய மிக அழகான பரிசுகளில் ஒன்றாகும்.

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

குறிப்பு: இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

இந்த திட்டத்தைப் பற்றி

நிகரில்லாத நன்றியுணர்வை பற்றிய 7 கதைகள்

நன்றியுணர்வு. இது மிகவும் முக்கியமானது என்பது நமக்குத் தெரியும், ஆனால் அதே சமயம் இது கடினமான ஒன்றாகவும் இருக்கலாம்—குறிப்பாக நன்றி செலுத்துவதற்கு நம்மிடம் எதுவுமே இல்லை என்று நாம் உணரும்போது. இந்தத் திட்டத்தில், மிகவும் இக்கட்டான அல்லது சற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளிலும் நன்றி செலுத்திய விவிலியத்தின் ஏழு அசாதாரணமான மக்களின் கதைகளை நாம் கண்டு ஊக்கம் பெறப்போகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ta.jesus.net/a-miracle-every-day/miracle