வாழ்க்கையின் புல்வெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் சங்கீதம் 23-உடன் கடந்து செல்லுங்கள்மாதிரி

வாழ்க்கையின் புல்வெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் சங்கீதம் 23-உடன் கடந்து செல்லுங்கள்

6 ல் 1 நாள்

யாருக்கு சிறந்த தந்தை கிடைக்கப்பெற்றது?

குழந்தைகள் தங்கள் தந்தையை பற்றிப் பெருமையாக பேசுவதை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? "என் அப்பா தான் உலகிலேயே பலசாலி" அல்லது "என் அப்பாவால் எதையும் செய்ய முடியும்!" என்று அவர்கள் சொல்வார்கள்.

நீங்கள் குழந்தையாக இருக்கும்போது, இந்த உலகம் ஒரு விளையாட்டு மைதானம் போன்றது, உங்கள் பெற்றோர்கள் தான் உங்களுக்கு ஹீரோக்கள். வாழ்க்கை மிகவும் எளிமையாக இருக்கிறது. ஆனால் நாம் வளர வளர, யதார்த்த நிலைமைகளைச் சந்திக்கும்போது, ஒரு குழந்தையைப் போன்ற வியப்புடன் வாழ்க்கையையோ அல்லது மனிதர்களையோ பார்ப்பது மிகவும் கடினமாகிவிடுகிறது.

நாம் சங்கீதம் 23-யை வாசிக்கும்போது, அது ஒரு கற்பனைக் கதை போலத் தோன்றுகிறது:

"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்." – சங்கீதம் 23:1-3 (TAOVBSI)

இந்த வார்த்தைகளைப் பார்க்கும்போது, தாவீது ஒரு மேய்ப்ப சிறுவனாக, பச்சை மலைகளுக்கும் அமைதியான நீரோடைகளுக்கும் நடுவில் வாழ்ந்தபோது இதை எழுதியிருப்பார் என்று தோன்றலாம்.

இருப்பினும், தாவீது ஒவ்வொரு சங்கீதத்தையும் எந்த வயதில் எழுதினார் என்று பதிவு செய்யப்படவில்லை என்றாலும், அவர் ராஜாவாக இருந்த காலத்தில்தான் சங்கீதம் 23-யை எழுதியிருக்கக்கூடும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

அந்த நேரத்தில், தாவீது பலவிதமான சோதனைகள், துன்புறுத்தல்கள், ஆழ்ந்த வலி, துரோகம், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள் மற்றும் ஒரு குழந்தையின் இழப்பைக் கூட சந்தித்திருந்தார் (அந்த இழப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது).

இருந்தபோதிலும், அவர் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்: "நான் தாழ்ச்சியடையேன்" (எனக்குக் குறைவில்லை) என்று - (சங்கீதம் 23:1 (TAOVBSI)).

தேவனுடைய பராமரிப்பும் வழிகாட்டுதலும் என்பது எல்லா நேரங்களிலும் பிரச்சனைகளே இல்லாத சூழல் என்று அர்த்தமல்ல என்பதை தாவீது அறிந்திருந்தார். வாழ்க்கையின் புயல்களுக்கும் சோதனைகளுக்கும் மத்தியிலும், தேவன் நம்மை அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் நடத்தி, நீதியின் பாதைகளில் வழிநடத்தி, நம் ஆத்துமாவைத் தேற்றுகிறார் என்பதே இதன் பொருள் (சங்கீதம் 23:2-3 (TAOVBSI)).

என்னுடன் இணைந்து ஜெபிப்பீர்களா?

ஜெபம்: பரலோக பிதாவே, தாவீதைப் போலவே என்னையும் புல்லுள்ள இடங்களில் கிடத்தி, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் நடத்தி, உமது நாமத்தினிமித்தம் என் ஆத்துமாவைத் தேற்றுவதற்காக உமக்கு நன்றி. நீர் ஒரு சிறந்த மேய்ப்பனாக இருப்பதற்கும், நான் உம்முடைய ஆடாக இருப்பதற்கும் நன்றி. இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் பிதாவே, ஆமென்.

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

குறிப்பு: இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

வாழ்க்கையின் புல்வெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் சங்கீதம் 23-உடன் கடந்து செல்லுங்கள்

வாழ்க்கையில், பெரிய உயர்வுகளும் ஆழமான தாழ்வுகளும் ஒரே நேரத்தில் அல்லது குறுகிய இடைவெளியில் தொடர்ச்சியாக ஏற்படக்கூடும். இதை நாம் எவ்வாறு சமாளிப்பது? வேதாகமத்தின் மிகவும் பிரபலமான அத்தியாயமாக கருதப்படும் சங்கீதம் 23 “கர்த்தர் என் மேய்ப்பர்” என்ற இந்த சங்கீதத்தின் மூலம் தாவீது நமக்கு ஆழமான புரிதலை வழங்குகிறார்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ta.jesus.net/a-miracle-every-day/miracle