அப்போது கர்த்தர் எனக்குப் பதிலளித்துச் சொன்னதாவது:
“இந்த வெளிப்படுத்துதலை எழுதி வை,
அதை கற்பலகையில் தெளிவாய் பொறித்து வை.
அதை வாசிப்பவன் விரைவாய் ஓடி அறிவிக்கக்கூடியதாக இருக்கட்டும்.
இந்த வெளிப்படுத்தல் அதற்கு நியமிக்கப்பட்ட காலத்தில்
நிறைவேறக் காத்திருக்கிறது.
அது முடிவு காலத்தைப்பற்றிச் சொல்கிறது,
அது பொய்யாய் போக மாட்டாது.
அது வருவதற்குக் காலம் தாழ்த்தினாலும்,
அதற்காகக் காத்திரு, அது நிச்சயமாய் வரும்;
அது தாமதிக்காது.