1
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:26
பரிசுத்த பைபிள்
TAERV
இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்குப் போதிய விசுவாசம் இல்லை” என்று கூறினார். பின்பு, இயேசு எழுந்து நின்று காற்றுக்கும் அலைகளுக்கும் ஒரு கட்டளை பிறப்பித்தார். காற்று நின்றது. கடல் மிகவும் அமைதியானது.
Compara
Explorar மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:26
2
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:8
அதற்கு அந்த அதிகாரி, “கர்த்தாவே, நீர் என் வீட்டிற்குள் வருமளவிற்கு நான் மேலானவனல்ல. நீர் செய்யவேண்டுவதெல்லாம், என் வேலைக்காரன் குணமடையட்டும் என்று கட்டளையிடுவது மட்டுமே. அப்போது அவன் குணம் அடைவான்.
Explorar மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:8
3
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:10
இதைக் கேட்ட இயேசு வியப்படைந்தார். தன்னுடன் இருந்த மக்களிடம் இயேசு, “உண்மையைச் சொல்லுகிறேன், நான் பார்த்த மனிதர் அனைவரிலும், இஸ்ரவேலிலும் கூட, இவனே அதிக விசுவாசம் உடையவன்.
Explorar மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:10
4
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:13
பிறகு இயேசு அதிகாரியிடம், “வீட்டிற்குச் செல். நீ எவ்வாறு விசுவாசித்தாயோ அவ்வாறே உன் வேலைக்காரன் குணமாவான்” என்று சொன்னார். அந்த நேரத்திலேயே அந்த அதிகாரியின் வேலைக்காரன் குணமாக்கப்பட்டான்.
Explorar மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:13
5
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:27
படகிலிருந்தவர்கள் வியப்புற்று, “எப்படிப்பட்ட மனிதர் இவர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று கூறி வியப்படைந்தனர்.
Explorar மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:27